டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சாலைப் பாதுகாப்பு  வாரவிழா

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ராமு சீதா பாலிடெக்னிக் சமுதாய மேம்பாட்டு திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சாலைப் பாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:13 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ராமு சீதா பாலிடெக்னிக் சமுதாய மேம்பாட்டு திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சாலைப் பாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது.

   இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். பேரணி போலீஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பாண்டியன் நகர் முக்குசாலையை சென்றடைந்தது.

    பஸ் நிலையத்தின் முன்பு சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, சமுதாய பாலிடெக்னிக் திட்ட அலுவலர் மாரியப்பன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆனந்தகுரு மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.